×

சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி ஒடிசா தொழிலாளி பலி

சிதம்பரம், மே 3: சிதம்பரம் அருகே உள்ள வசப்புத்தூர் பகுதியில் இறால் குட்டையில் ஒடிசா மாநிலம் சர்தார் பவுச் முண்டாடா பகுதியை சேர்ந்த டாபாகும்பார் மகன் அகஜாகும்பகர் (34) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இறால் குட்டையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அந்த பகுதியில் தரையில் கிடந்த வயரை கையால் எடுத்தபோது மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் மயங்கி கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இவரது உறவினர் அசோக் கானர் என்பவர், சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி ஒடிசா தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Odisha ,Chidambaram ,Vasaputhur ,Sardar ,Bouch ,Mundada ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்